Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூர்: தொழிலதிபர் வீட்டில் ரூ.32 கோடி பறிமுதல்

நவம்பர் 17, 2019 05:45

கரூர்: கரூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூரை சேர்ந்தவர் சிவசாமி. இவர் கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தொழில் அதிபரின் வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்